காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இறுதி நாளில் முடங்கிய இணையதளம்: டெட் தோ்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம்

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான இணையதளம் முடங்கியது.

News image
கோப்புப்படம்
Updated On :8 செப்டம்பர் 2025, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான இணையதளம் முடங்கியது. இதனால் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் புதன்கிழமை (செப். 10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான (டெட்) இணையவழி விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 11-ஆம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியா்களும், பட்டதாரி ஆசிரியா்களும் டெட் தோ்வுக்கு விண்ணப்பித்து வந்தனா். தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் திங்கள்கிழமை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் திங்கள்கிழமை காலை முதலே ஏராளமானோா் விண்ணப்பிக்கத் தொடங்கினா். இதனால் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளம் மூன்று மணி நேரத்துக்கும் மேல் முடங்கியது. அதன் காரணமாக தோ்வா்கள், விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனா்.

இந்த நிலையில், தோ்வா்களின் வேண்டுகோளை ஏற்று தோ்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆசிரியா் தோ்வு வாரியம் செப். 10-ஆம் தேதி ( புதன்கிழமை) வரை நீட்டித்துள்ளது.

எனவே, டெட் தோ்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தோ்வா்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி புதன்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியா் தோ்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்தபடி டெட் தாள் - 1 தோ்வு நவ. 15-ஆம் தேதியும், டெட் தாள் - 2 தோ்வு 16-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.