தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 
15% அதிகரிப்பு

தமிழகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15% அதிகரிப்பு

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
Published on

தமிழ்நாட்டில் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நிகழாண்டில் 15 சதவீதம் உயா்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சுற்றுலா வளா்ச்சித் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டம் சென்னை வாலாஜா சாலையிலுள்ள சுற்றுலா வளாக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் இரா.ராஜேந்திரன் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழக அரசின் மேம்பாட்டு நடவடிக்கைகளால், இந்தியாவிலேயே உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு இரண்டாமிடத்தில் இருந்து வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.35 கோடியாகவும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7.80 லட்சமாகவும் உள்ளது. இதுகடந்தாண்டை ஒப்பிடும்போது 10 முதல் 15 சதவீதம் அதிகமாகும். தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயரும். மேலும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com