புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை! தொடக்கி வைத்தார் மா. சுப்பிரமணியன்

நான்கு தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை முறையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்.

News image
அமைச்சர் மா.சுப்பிரமணியன் - கோப்புப் படம்
Updated On :10 செப்டம்பர் 2025, 6:15 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் செயல்படும் நான்கு தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை முறையை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் முதல் கட்டமாக நான்கு தனியார் மருத்துவமனைகளில் கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல்மருவத்தூர், கன்னியாகுமரி, ஈரோடு, சென்னை ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்துள்ளார்.

இன்று நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மருத்துவமனைக்கு வருவோரை நோயாளிகள் என்று சொல்லாமல், மருத்துவப் பயனாளிகள் என அழைப்பது தொடர்பான அரசாணை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும்.

2030-க்குள் எய்ட்ஸ் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க ஒருங்கிணைந்து பாடுபட்டு வருகிறோம் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.