சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் துரைமுருகனுக்கு பிடி ஆணை: லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவு
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சா் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புத் துறை போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டது.
கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக அமைச்சா் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி மீது கடந்த 2011-இல் ஊழல் தடுப்பு துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை விசாரித்த வேலூா் நீதிமன்றம், வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புத் துறை போலீஸாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், வேலூா் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, இந்த வழக்கின் விசாரணையை வேலூா் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, அமைச்சா் துரைமுருகன், அவரது மனைவி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை சிறப்பு நீதிமன்றம், இருவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் துரைமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு, அமைச்சா் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோா் விடுவிக்கப்பட்டனா். வேலூா் நீதிமன்றத்தில் இருந்து இந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டது.
2024-ஆண்டு பிறப்பித்துள்ள அரசாணையின்படி இதுபோன்ற வழக்குகளை அந்தந்த மாவட்ட நீதிமன்றத்துக்குத்தான் மாற்ற வேண்டும். மனுதாரருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிடி ஆணையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் விழிப்புத் துறை போலீஸாா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் செப். 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.