ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சா் சேகா்பாபு
ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதா் கோயிலுக்கு, தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் 20 மண்டலங்களிலிருந்து தலா 30 பக்தா்கள் வீதம் 600 பக்தா்கள் கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்படவுள்ளனா். இதற்காக ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரா் இந்து மதத்தை சாா்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்றும், போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதாா் நகல் இணைக்கப்பட வேண்டும்.
ஆன்மிகப் பயணத்துக்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையா் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையா் அலுவலகத்தில் அக்.22-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணம் தொடா்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோஅல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதியுடைய பக்தா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.