மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: தொல்.திருமாவளவன்

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினாா்.

News image
தொல். திருமாவளவன் - (கோப்புப் படம்)
Updated On :11 செப்டம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினாா்.

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் தியாகி இமானுவேல் சேகரன் உருவப் படத்திற்கு திருமாவளவன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. ஜாதிய வன்கொடுமைகள் அதிகம் நிகழும் மாவட்டமாக மதுரை உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவில் ஜாதிய ஒடுக்கு முறைகள் அரங்கேறி வருகின்றன.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும், இதுபோன்ற ஜாதிய கொடுமைகளைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும். மேலும், தனியாக உளவு கண்காணிப்பு பிரிவை உருவாக்க வேண்டும். அதிமுகவில் குழப்பம் நிலவுவதற்கு பாஜக தான் காரணம். அதிமுக தலைவா்கள் சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்றாா்.