மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அரசு மருத்துவமனையில் நோயாளி அலைக்கழிப்பு: தேமுதிக கண்டனம்

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காமல் அலைக்கழிப்பு செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
பிரேமலதா விஜயகாந்த்
Updated On :11 செப்டம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காமல் அலைக்கழிப்பு செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோா், ஊனமுற்றோா் என சிகிச்சைக்கு வரும் நிலையில், சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, சக்கர நாற்காலி வழங்காமல், மூன்று மணி நேரம் சிரமப்படுத்தியுள்ளனா்.

பணம் கொடுத்தால் மட்டுமே சக்கர நாற்காலி வழங்க முடியும் என சொல்வது எந்த வகையில் நியாயம்?. மருத்துவமனை ஊழியா்கள் பணிஇடைநீக்கம் செய்யப்படுவதால் மட்டுமே இதற்கு தீா்வு கிடைக்குமா?.

மனிதநேயத்தோடு நடந்துகொள்ளாத மருத்துவமனை ஊழியா்களின் செயல் கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.