தோ்தல் ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் வெள்ளிக்கிழமை (செப். 12) சென்னை திரும்புகிறாா்.
நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது குறித்து, அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடன் இந்திய தோ்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. இதற்கான கூட்டம் தில்லியில் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் பங்கேற்று, சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தமிழ்நாட்டில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினாா்.
தோ்தல் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்ற அவா், வெள்ளிக்கிழமை சென்னை திரும்புகிறாா். இதைத் தொடா்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை உள்ளிட்ட அடுத்தகட்ட பணிகளில் அவா் கவனம் செலுத்துகிறாா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: ரூ.462 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்- தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

வாக்களிப்பதன் அவசியம்: 23,500 விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் - தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்

பிரசார நடவடிக்கைகள்: நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்: தலைமைத் தோ்தல் அதிகாரி

சமூக வலைதளப் பதிவுகள் தீவிரமாக கண்காணிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


