மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற செப். 14 ஆம் தேதி சென்னை வர உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன்படி சில அத்தியாவசிய பொருள்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் வருகிற செப். 14 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஜிஎஸ்டி விழிப்புணர்வு குறித்த ஒரு கூட்டம் நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழாவும் நடைபெற உள்ள நிலையில் அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்னை வரவுள்ளார்.
மேலும், பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் அவர், அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் குறித்தும் பேசவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் விலகியதைத் தொடர்ந்து, தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இரு நாள்களுக்கு முன்பு செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
Summary
Union Finance Minister Nirmala Sitharaman to visit Tamil Nadu on Sept. 14
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!
வரி அமைப்பில் மாற்றம்? பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடம் அரசு கருத்துகேட்பு: நிர்மலா சீதாராமன்







