டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

’அன்புமணியை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை’...

News image
அன்புமணி - (கோப்புப்படம்)
Updated On :11 செப்டம்பர் 2025, 8:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு விதிக்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “நோட்டீஸுக்கு அன்புமணி பதிலளிக்காததால், அவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்குகிறேன்” என்றார்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எனக்கு இதைவிட வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன, வழக்கறிஞர் பாலு விளக்கம் அளிப்பார் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலு, “பாமக கட்சி விதிகளின்படி, நிறுவனருக்கு கட்சியின் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அதிகாரம் இல்லை. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கே அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

பாமகவில் முற்றும் மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. ராமதாஸின் எதிர்ப்பை மீறி, கட்சி நடவடிக்கைகளை அன்புமணி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ராமதாஸ் தலைமையில் கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக ஒழுங்கீனமாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து ஆக. 31-க்குள் அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால் அவர் பதிலளிக்காததால் 10 நாள்கள் மீண்டும் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், அன்புமணிக்கு விடுக்கப்பட்ட அவகாசம் நிறைவடைந்தததை அடுத்து, அவர் பதிலளிக்காததால் கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.

summary

Ramadoss has no power: Anbumani's team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.