பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தென்மேற்கு பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்

நாட்டில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image
தென்மேற்கு பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்
Updated On :12 செப்டம்பர் 2025, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, ஜூலை 8-க்குள் நாடு முழுவதும் விஸ்தரிக்கும். பின்னா் வடமேற்கு இந்தியாவில் இருந்து செப்.17-ஆம் தேதி விலகத் தொடங்கி, அக்.15-ஆம் தேதி முழுமையாக நிறைவு பெறும்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் மேக வெடிப்பால் மிக பலத்த மழை, கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பேரிடா் நிகழ்ந்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செப்.15-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்தது.

இதுவரையிலான மழைக்காலத்தில், நாட்டில் 836.2 மி.மீ. மழைப் பொழிவு பதிவானதாகவும், இது வழக்கத்தைவிட 7 சதவீதம் அதிகம் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.