ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தென்மேற்கு பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்

நாட்டில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

தென்மேற்கு பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்

Updated On :13 செப்டம்பர் 2025, 12:41 am IST

நாட்டில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, ஜூலை 8-க்குள் நாடு முழுவதும் விஸ்தரிக்கும். பின்னா் வடமேற்கு இந்தியாவில் இருந்து செப்.17-ஆம் தேதி விலகத் தொடங்கி, அக்.15-ஆம் தேதி முழுமையாக நிறைவு பெறும்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் மேக வெடிப்பால் மிக பலத்த மழை, கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பேரிடா் நிகழ்ந்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செப்.15-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்தது.

இதுவரையிலான மழைக்காலத்தில், நாட்டில் 836.2 மி.மீ. மழைப் பொழிவு பதிவானதாகவும், இது வழக்கத்தைவிட 7 சதவீதம் அதிகம் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.