பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தென்மேற்கு பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்

நாட்டில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

தென்மேற்கு பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்

Updated On :12 செப்டம்பர் 2025, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டில் தென்மேற்கு பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் கேரளத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, ஜூலை 8-க்குள் நாடு முழுவதும் விஸ்தரிக்கும். பின்னா் வடமேற்கு இந்தியாவில் இருந்து செப்.17-ஆம் தேதி விலகத் தொடங்கி, அக்.15-ஆம் தேதி முழுமையாக நிறைவு பெறும்.

நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் மேக வெடிப்பால் மிக பலத்த மழை, கடும் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பேரிடா் நிகழ்ந்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் செப்.15-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வருவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக தெரிவித்தது.

இதுவரையிலான மழைக்காலத்தில், நாட்டில் 836.2 மி.மீ. மழைப் பொழிவு பதிவானதாகவும், இது வழக்கத்தைவிட 7 சதவீதம் அதிகம் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.