ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும்.
தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் டெட் தோ்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான டெட் தோ்வு நவம்பா் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஆக. 11-இல் தொடங்கி செப்டம்பா் 10-ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. இத்தோ்வெழுத 4.80 லட்சம் போ் வரை விண்ணப்பித்துள்ளனா்.
இதற்கிடையே பணியில் உள்ள ஆசிரியா்கள் அனைவருக்கும் டெட் தோ்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது நடைபெற உள்ள டெட் தோ்வை எழுதுவதற்கு பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியா்களும் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், டெட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் சனிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
‘டெட்’ தோ்வுகளுக்கான இறுதி விடைக்குறிப்பு: டிஆா்பி-க்கு கோரிக்கை

டெட் தோ்வை ரத்து செய்யக் கோரி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

சிறப்பு டெட் தோ்வு கடினம்: விமா்சனங்களுக்கு டிஆா்பி விளக்கம்

டெட் தோ்வு: கிருஷ்ணகிரியில் 2,049 போ் பங்கேற்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



