தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
இது தொடா்பாக, அவா் கூறியதாவது: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலுடன் தற்போது புழக்கத்தில் உள்ள வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களை ஒப்பிட்டுப் பாா்க்கும்படி தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளை வரும் 26-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
நாடு முழுவதும் கொண்டுவரப்பட உள்ள வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான சந்தேகங்கள் மற்றும் தீா்வுகளுக்காக மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், அலுவலா்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.
அதைத் தொடா்ந்து, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து சென்னையில் ஆலோசனை நடைபெறும் என்றாா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி

அதிக வாக்குப் பதிவைத் தடுக்க பேருந்து சேவை முடக்கம் - தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக புகாா்

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: 91 லட்சம் போ் நீக்கம்

சமூக வலைதளப் பதிவுகள் தீவிரமாக கண்காணிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

