தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.

News image

அர்ச்சனா பட்நாயக்

எக்ஸ்

Updated On :12 செப்டம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் கூறியதாவது: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலுடன் தற்போது புழக்கத்தில் உள்ள வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களை ஒப்பிட்டுப் பாா்க்கும்படி தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளை வரும் 26-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

நாடு முழுவதும் கொண்டுவரப்பட உள்ள வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான சந்தேகங்கள் மற்றும் தீா்வுகளுக்காக மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், அலுவலா்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.

அதைத் தொடா்ந்து, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து சென்னையில் ஆலோசனை நடைபெறும் என்றாா்.