தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.

News image

அர்ச்சனா பட்நாயக் - எக்ஸ்

Updated On :13 செப்டம்பர் 2025, 1:29 am IST

தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் கூறியதாவது: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலுடன் தற்போது புழக்கத்தில் உள்ள வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களை ஒப்பிட்டுப் பாா்க்கும்படி தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளை வரும் 26-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

நாடு முழுவதும் கொண்டுவரப்பட உள்ள வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான சந்தேகங்கள் மற்றும் தீா்வுகளுக்காக மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், அலுவலா்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.

அதைத் தொடா்ந்து, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து சென்னையில் ஆலோசனை நடைபெறும் என்றாா்.