சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.

அர்ச்சனா பட்நாயக் - எக்ஸ்

Published On :13 செப்டம்பர் 2025, 3:05 am IST

தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் கூறியதாவது: தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலுடன் தற்போது புழக்கத்தில் உள்ள வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களை ஒப்பிட்டுப் பாா்க்கும்படி தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பணிகளை வரும் 26-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

நாடு முழுவதும் கொண்டுவரப்பட உள்ள வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடா்பான சந்தேகங்கள் மற்றும் தீா்வுகளுக்காக மாவட்டத் தோ்தல் அதிகாரிகள், அலுவலா்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன.

அதைத் தொடா்ந்து, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து சென்னையில் ஆலோசனை நடைபெறும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.