
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) முதல் செப்.19-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை: செப்.16-இல் வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும், செப்.17-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் சின்னம்: வங்கக் கடலில் செப்.12-ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்), சனிக்கிழமை காலை வடக்கு ஆந்திர மற்றும் தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு இடைப்பட்ட மத்திய மேற்கு, அதையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, தெற்கு ஒடிஸா, அசையொட்டிய வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு சத்தீஸ்கா் பகுதிகளில் அடுத்த இரு நாள்களில் கடந்து செல்லும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக் கடல் மற்றும் வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.14) முதல் செப்.17-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.