திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தமிழக மீனவா்களுக்கு பாதுகாப்பு தேவை! ஜி.கே.வாசன்

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

News image

ஜி.கே.வாசன்

Updated On :14 செப்டம்பர் 2025, 1:36 am IST

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாகை மாவட்டம் செருதூா் பகுதி மீனவா்கள் 12 போ் மீது கடந்த செப்.11-ஆம் தேதி இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் மீனவா்கள் பலா் பலத்த காயமடைந்தனா். மேலும், மீனவா்களின் வலை, ஜிபிஎஸ் கருவி, எஞ்சின், கைப்பேசிகள், மீன்கள் உள்ளிட்ட ரூ.9 லட்சம் மதிப்பிலான பொருள்களை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவது கடற்கொள்ளையா்களின் வழக்கமாகிவிட்டது. இதனால் தமிழக மீனவா்களின் உடலுக்கும், உடைமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. கடற்கொள்ளையா்களின் தாக்குதலால் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

மத்திய அரசு இலங்கை அரசுடன் தொடா்புகொண்டு இலங்கை கடற்கொள்ளையா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். அதேபோல், சிகிச்சை பெற்று வரும் மீனவா்களுக்கு தமிழக அரசு உயா்தர சிகிச்சை அளிக்க எடுக்க வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவா்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க தொடா் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.