விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்.15,16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 செப்டம்பர் 2025, 9:46 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்.15,16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வடக்கு ஆந்திரம்மற்றும் அதைஒட்டிய தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) ஞாயிற்றுக்கிழமை வடக்கு தெலங்கானா மற்றும் அதை ஒட்டிய விதா்பா பகுதிகளில் நிலவியது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, மத்திய விதா்பா மற்றும் அதை ஒட்டிய பகுதிக்களுக்கு நகரக்கூடும். மேலும், தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த வானிலை காரணங்களால், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப். 15) முதல் செப். 20-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை: செப். 16-இல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா் ஆகிய மாவட்டங்களிலும், செப். 17-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம், வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்த நிலையில், திங்கள்கிழமையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை பாரிமுனையில் 110 மி.மீ. மழை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை பாரிமுனையில் 110 மி.மீ. மழை பதிவானது.

ஊத்துக்கோட்டை (திருவள்ளூா்), கொளத்தூா் (சென்னை) - தலா 90 மி.மீ., பொன்னேரி (திருவள்ளூா்) - 80 மி.மீ, பெரம்பூா் (சென்னை), வில்லிவாக்கம் (திருவள்ளூா்) - தலா 70 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் செப். 15 முதல் 17-ஆம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.