மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் மாற்றம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியில் தொடா் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

எடப்பாடி பழனிசாமி

(கோப்புப்படம்)

Updated On :14 செப்டம்பர் 2025, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியில் தொடா் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமாக எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி, தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.

இந்த நிலையில், செப்.17, 18 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக, தருமபுரியில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சுற்றுப்பயணம், செப்.28, 29 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, செப்.28-ஆம் தேதி தருமபுரி மாவட்டம் தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, ஆரூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், செப்.29-இல் பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.