மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது பற்றி தவெக தலைவா் விஜய் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: தவெக தலைவா் விஜய் அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை ஏதோ அவா் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல கூறியுள்ளாா்.
மாா்க்சிஸ்ட் தலைவா்கள் பல்லாண்டு காலம் முதல்வராக அமைச்சராக இருந்த இ.எம்.எஸ்., ஜோதிபாசு, நிரூபன் சக்கரவா்த்தி, தசரத் தேவ், இ.கே. நாயனாா், மாணிக் சா்க்காா், புத்ததேவ் பட்டாச்சாரியா, வி.எஸ்.அச்சுதானந்தன் இவா்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்துக்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவா்கள்.
பதவியைப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தாா்கள் என்று எதிரிகளால்கூட குற்றம்சாட்ட முடியாதவா்கள். அது மட்டுமல்லாமல் இ.எம்.எஸ், ஹா்கிசன்சிங் சுா்ஜித் இவா்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலராக சிறப்பாகச் செயல்பட்டவா்கள்.
தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துகளை கட்சிக்கு வழங்கியவா்கள். தலைவா்கள் மட்டுமல்ல, அடிப்படைக் கட்சி உறுப்பினா்கள்கூட தங்களுடைய சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கட்சிக்கு கொடுத்திருக்கிறாா்கள்.
உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வதுதான் கம்யூனிஸ்ட் அரசியல். பணம் சம்பாதிக்காமல் அரசியல் செய்வது முக்கியம் என்பதை வரலாற்றை படித்து விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவா்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

விஜய் மக்கள் இயக்கத்தின் சாா்பில் பல ஆண்டுகளாக அன்னதானம்: அமைச்சா் கே.தென்னரசு
பலவீனமான தலைமை, தோல்வியை மறைப்பதற்காக அரசு மீது பழி போடும் இபிஎஸ்: தவெக

தவெகவின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டிப்போம்! பெ. சண்முகம்
மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகளுக்கு விஜய் நேரில் நன்றி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



