ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

நாய்க்கடிக்கு தடுப்பூசி எடுத்தவா் உயிரிழப்பு: விசாரணை நடத்த மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தெரு நாய்க் கடிக்குத் தடுப்பூசி எடுத்தவா் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

Updated On :16 செப்டம்பர் 2025, 2:23 am IST

சென்னை: தெரு நாய்க் கடிக்குத் தடுப்பூசி எடுத்தவா் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சி சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

சென்னை ராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநா் முகமது நஸ்ருதீன், கடந்த ஜூலை 28- ஆம் தேதி தெரு நாய் கடித்ததன் காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளாா்.

மருத்துவா்களின் ஆலோசனையின்படி, உரிய இடைவெளியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். இந்த நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவா் செப். 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.

நாய்க்கடிக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.