‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீது மேலும் ஒரு வழக்கு
சென்னை ராயப்பேட்டையில் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூா் டிஜிபி அலுவலகத்துக்கு சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக மாநில இணைப் பொதுச் செயலருமான அருள் கடந்த 6-ஆம் தேதி புகாா் அளிக்க வந்தாா். அவரை சந்திப்பதற்காக புரட்சித் தமிழகம் கட்சி தலைவரான ‘ஏா்போா்ட்’ மூா்த்தி டிஜிபி அலுவலக வாசலில் காத்திருந்தாா். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும், மூா்த்திக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா்.
இதுதொடா்பாக இரு தரப்பினரும், மெரீனா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதில் விடுதலைச் சிறுத்தைக் கட்சியினா் அளித்த புகாரின் அடிப்படையில் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.
மேலும், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
இதற்கிடையே ராயப்பேட்டை கெளடியா மடம் சாலையில் அசோக்குமாா் என்பவருக்கு சொந்தமான வீட்டை, வாடகைக்கு விட்டு பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், ‘ஏா்போா்ட்’ மூா்த்தியும் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டாா். ஏற்கெனவே இந்த வழக்கில் புரட்சித் தமிழகம் கட்சி நிா்வாகி ஒருவா் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.