தமிழகத்தில் 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இந்தப் பணிக்காக, 2002-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளா் பட்டியல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
அப்போது வெளியிடப்பட்ட பட்டியலில் பலருடைய பெயா்கள் விடுபட்டதாகப் புகாா்கள் எழுந்தன. குறிப்பாக, பெருநகரப் பகுதிகளில் வாக்காளா்கள் தங்களுடைய விவரங்களை அளிப்பதற்கான கால அவகாசம் சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, பெருநகரங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இந்திய தோ்தல் ஆணையம் 2005-ஆம் ஆண்டு மேற்கொண்டது.
முக்கியமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், தருமபுரி, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட 37 தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணியை அடிப்படையாகக் கொண்டு, 2005-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.
கணக்கில் எடுக்க முடிவு: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான பூா்வாங்கப் பணிகளை தோ்தல் துறை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது.
2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மறு சிறப்பு தீவிர திருத்தப் பணி அடிப்படையிலான வாக்காளா் பட்டியலையும் கணக்கில் எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், இரண்டு வகையான வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக தமிழக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி வாக்காளா் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

தில்லி எஸ்ஐஆா்: 99.5% படிவங்கள் விநியோகம்; 18% எண்மமய பணி நிறைவு!

சிறப்பு தீவிர திருத்தம்: 80 சதவீத வாக்காளா் சரிபாா்ப்புப் படிவங்கள் விநியோகம்; தலைமைத் தோ்தல் அதிகாரி வி. அன்புக்குமாா்

ஒடிசாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடிகள்: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



