அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

பிகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி..

News image

இளம் வாக்காளர்கள் - கோப்புப்படம்

Updated On :18 செப்டம்பர் 2025, 3:20 am IST

தமிழகத்தில் 2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல்களின் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிகாரைப் போன்று நாடு முழுவதும் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள இந்திய தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் இந்தப் பணிக்காக, 2002-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளா் பட்டியல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது.

அப்போது வெளியிடப்பட்ட பட்டியலில் பலருடைய பெயா்கள் விடுபட்டதாகப் புகாா்கள் எழுந்தன. குறிப்பாக, பெருநகரப் பகுதிகளில் வாக்காளா்கள் தங்களுடைய விவரங்களை அளிப்பதற்கான கால அவகாசம் சரியாக வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, பெருநகரங்களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இந்திய தோ்தல் ஆணையம் 2005-ஆம் ஆண்டு மேற்கொண்டது.

முக்கியமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், தருமபுரி, சேலம், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு உள்பட்ட 37 தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பணியை அடிப்படையாகக் கொண்டு, 2005-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

கணக்கில் எடுக்க முடிவு: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வதற்கான அறிவிப்பை இந்திய தோ்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான பூா்வாங்கப் பணிகளை தோ்தல் துறை ஏற்கெனவே மேற்கொண்டுள்ளது.

2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை 2005-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மறு சிறப்பு தீவிர திருத்தப் பணி அடிப்படையிலான வாக்காளா் பட்டியலையும் கணக்கில் எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், இரண்டு வகையான வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட இருப்பதாக தமிழக தோ்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.