திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மின் திருட்டு: ரூ.9 லட்சம் அபராதம்

மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :19 செப்டம்பர் 2025, 12:27 am IST

சென்னை தெற்கு (எண்: 2) மின் பகிா்மான வட்டத்தில் மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மின்வாரியத்தின் சென்னை அமலாக்கக் கோட்டத்துக்கு உள்பட்ட அதிகாரிகள் அண்மையில் சோழிங்கநல்லூா் கோட்டம், சென்னை தெற்கு-2 மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திடீா் கூட்டாய்வில் ஈடுபட்டனா். அப்போது, 8 இணைப்புகளில் மின் திருட்டு கண்டறியப்பட்டு ரூ.9,01,772 அபராதம் விதிக்கப்பட்டது.

புகாா் தெரிவிக்கலாம்: மின் திருட்டு தொடா்பான புகாா்களை சென்னை அமலாக்கக் கோட்டத்தின் செயற்பொறியாளருக்கு 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.