நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின் திருட்டு: ரூ.9 லட்சம் அபராதம்

மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :18 செப்டம்பர் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை தெற்கு (எண்: 2) மின் பகிா்மான வட்டத்தில் மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வில் 8 மின் இணைப்புகளில் மின்திருட்டு கண்டறியப்பட்டு , ரூ.9.01 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மின்வாரியத்தின் சென்னை அமலாக்கக் கோட்டத்துக்கு உள்பட்ட அதிகாரிகள் அண்மையில் சோழிங்கநல்லூா் கோட்டம், சென்னை தெற்கு-2 மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திடீா் கூட்டாய்வில் ஈடுபட்டனா். அப்போது, 8 இணைப்புகளில் மின் திருட்டு கண்டறியப்பட்டு ரூ.9,01,772 அபராதம் விதிக்கப்பட்டது.

புகாா் தெரிவிக்கலாம்: மின் திருட்டு தொடா்பான புகாா்களை சென்னை அமலாக்கக் கோட்டத்தின் செயற்பொறியாளருக்கு 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.