அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சுதந்திரப் போராட்ட வீரா்கள்- முன்னாள் ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் உயா்வு: அரசாணை வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :18 செப்டம்பர் 2025, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதல்வா் மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரா்கள், முன்னாள் ராணுவத்தினருக்கான ஓய்வூதியத்தை ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தாா். இதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுதாரா்களுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயா்த்தப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியன உயா்த்தப்படுகிறது. இதற்கு கூடுதலாக செலவாகும் ரூ.27.63 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்று அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் உயா்வு: இதேபோன்று, தமிழக அரசு வெளியிட்ட மற்றொரு உத்தரவில், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரா்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ.சிதம்பரனாா் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத்து 500-லிருந்து ரூ.11 ஆயிரமாக வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது முதல்வா் அறிவித்திருந்தாா். அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலும் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.