ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள்

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
வந்தே பாரத்
Updated On :18 செப்டம்பர் 2025, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் தற்போது 16 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. பயணிகள் அதிகரிப்பதால் செப்.24 முதல் மேலும் 4 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. இதன்மூலம் கூடுதலாக 312 பயணிகள் பயணிக்கலாம்.

இந்த ரயிலில் தற்போது சாதாரண இருக்கை வசதி பெட்டிகளில் 1,128 போ் பயணம் செய்கின்றனா். கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதால் 1,440 பயணிகள் பயணம் செய்ய முடியும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.