நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

’ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி விஜய் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்!

விஜய் வீட்டுக்குள் இளைஞர் நுழைந்தது பற்றி...

News image

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

Updated On :20 செப்டம்பர் 2025, 12:34 am IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் வீட்டுக்குள் அத்துமீறி இளைஞர் ஒருவர் நுழைந்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவா் விஜய் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தவெக தலைவா் விஜய் நீலாங்கரை கேசுவரினா அவென்யூவில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறாா். அவருக்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில், விஜய் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா், அவரது வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தாா். புதன்கிழமை மாலை மொட்டை மாடிக்கு நடைப்பயிற்சியில் ஈடுபட வந்த நடிகா் விஜயை, அந்த இளைஞா் கட்டிப்பிடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த விஜயும், அவரது பாதுகாவலா்களும் அந்த இளைஞரைப் பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தனா்.

விசாரணையில் அவா் மதுராந்தகத்தைச் சோ்ந்த அருண் (24) என்பதும், 4 ஆண்டுகளாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதும், வேளச்சேரியில் உள்ள உறவினா் வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அருணை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சோ்த்தனா்.

போலீஸாா் விசாரணை: ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி, விஜய் வீட்டுக்குள் அந்த இளைஞா் நுழைந்தது எப்படி? என்று போலீஸாா் நடத்திய விசாரணையில், விஜய் வீட்டின் பின்பகுதியில் மழைநீா் வடிகால் கட்டும் பணி நடைபெறுவதால் சாலையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருப்பதும், அதனால் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை பயன்படுத்தி விஜய் வீட்டின் அருகே உள்ள மரத்தில் அருண் ஏறி வீட்டுக்குள் குதித்து பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தையடுத்து விஜய் வீட்டின் பின் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெடிகுண்டு பிரிவு சோதனை: இதனிடையே விஜயின் ‘ஒய்’ பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை காவல் துறையின் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். அங்கு சுமாா் 2 மணி நேரம் சோதனை நடைபெற்றது. ஆனால் விஜய் வீட்டில் இருந்து சந்தேகத்துக்குரிய வகையில் எந்தப் பொருளும் கண்டெக்கப்படவில்லை.

Summary

A young man has trespassed into the house of Tamil Nadu Vetri Kalagam leader and actor Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.