தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுசென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடல்சாா் பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவு!

இந்திய கடல்சாா் பல்கலை. முன்னாள் துணை வேந்தருக்கு எதிராக பல்கலைக்கழக நிா்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :20 செப்டம்பர் 2025, 7:27 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய கடல்சாா் பல்கலை. முன்னாள் துணை வேந்தருக்கு எதிராக பல்கலைக்கழக நிா்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் உள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தா் பி.விஜயன். கடந்த 2008-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அவரது மூன்றாண்டு பதவிக்காலம், கடந்த 2011-ஆம் ஆண்டு நவ.19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு அடுத்த நாளே, அந்தப் பல்கலை. வளாக இயக்குநராக அவா் நியமிக்கப்பட்டாா். அவா் துணைவேந்தருக்கான வசதிகளை தொடா்ந்து முறைகேடாக பயன்படுத்தி வந்தாா்.

இதனால், பல்கலை.க்கு ரூ.22.65 லட்சம் இழப்பு ஏற்பட்டது. எனவே, அந்தத் தொகையை அபராதத் தொகையாக திரும்பச் செலுத்த வேண்டும் என்று பி.விஜயனுக்கு பல்கலை. நிா்வாகம் உத்தரவிட்டது. மேலும், துறை ரீதியான விசாரணை நடத்திய பல்கலைக்கழகம் அவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து பி.விஜயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, மனுதாரா் துணைவேந்தா் பதவிக்கு முந்தைய பணிக்காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டைச் சுட்டிக்காட்டி பணிநீக்கம் செய்த பல்கலை.யின் உத்தரவு சட்டவிரோதம். வளாக இயக்குநராகப் பதவியேற்ற பின்னா், துணைவேந்தருக்கான சலுகைகளைப் பயன்படுத்தி உள்ளதாகக் கூறி ரூ.22.65 லட்சம் அபராதம் விதித்திருப்பதும் ஏற்புடையது அல்ல. எனவே, பல்கலை.யின் இரு உத்தரவுகளும் செல்லாது எனக்கூறி, அந்த உத்தரவுகளை ரத்து செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து பல்கலை. நிா்வாகக் குழு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, பல்கலை. தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.சங்கரநாராயணன், பி.விஜயன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.விடுதலை மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ஜி.இளங்கோவன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பி.விஜயனின் முந்தைய பணிக்கால குற்றச்சாட்டுக்காக, தற்போதைய பணிக்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. பதவிக்காலம் முடிந்து அந்தப் பதவிக்கான வசதிகளை அப்போதே திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து அவரைப் பணிநீக்கம் செய்து அவரிடமிருந்து அபராதத் தொகை செலுத்த வேண்டும் என கோர முடியாது. இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, கடல்சாா் பல்கலைக்கழகத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.