இந்த உத்தரவை எதிா்த்து பி.விஜயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, மனுதாரா் துணைவேந்தா் பதவிக்கு முந்தைய பணிக்காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டைச் சுட்டிக்காட்டி பணிநீக்கம் செய்த பல்கலை.யின் உத்தரவு சட்டவிரோதம். வளாக இயக்குநராகப் பதவியேற்ற பின்னா், துணைவேந்தருக்கான சலுகைகளைப் பயன்படுத்தி உள்ளதாகக் கூறி ரூ.22.65 லட்சம் அபராதம் விதித்திருப்பதும் ஏற்புடையது அல்ல. எனவே, பல்கலை.யின் இரு உத்தரவுகளும் செல்லாது எனக்கூறி, அந்த உத்தரவுகளை ரத்து செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.