நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் கடந்த 5 நாள்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது அதிா்ச்சி அளிப்பது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

News image
நயினாா் நாகேந்திரன்- கோப்புப்படம்
Updated On :20 செப்டம்பர் 2025, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கடந்த 5 நாள்களில் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நிகழ்ந்துள்ளது அதிா்ச்சி அளிப்பது என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 5 நாள்களில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடா்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிரானவை.

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாலியல் குற்றங்கள், அதிலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது அதிா்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று குறிப்பிடும் முதல்வா் மு.க.ஸ்டாலின், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.