குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

தமிழகம் 11.19% பொருளாதார வளர்ச்சி: முதல்வர் ஸ்டாலின் விடியோ வெளியிட்டு பெருமிதம்!

பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை பட்டியலிட்டு அவற்றுக்கு விளக்கம்...

News image
Updated On :20 செப்டம்பர் 2025, 6:12 pm IST

தமிழகம் 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருப்பதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(செப். 20) வெளியிட்டுள்ளதொரு விடியோவில் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு தரப்பிலிருந்தும் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றை பட்டியலிட்டு அவற்றுக்கு விளக்கமளித்து தமது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று விடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், “பல துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், மக்களுடைய வாழ்க்கைத்தரம், வாங்கும் திறன், கல்வி, மருத்துவத் திறன், உள்கட்டமைப்பு, சட்டம் - ஒழுங்கு என எல்லாவற்றையும் எடுத்துக்காட்டுகிற குறியீடுதான் ஜிஎஸ்டிபி. ஆகவே, இது முக்கியத்துவம் பெறுகிறது.

நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது கரோனா பெருந்தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தது. நிதி நெருக்கடி, ஒன்றிய பாஜக அரசு நமக்கு நியாயமாக தர வேண்டிய பணத்தை தராமல் வஞ்சித்தது என பல பிரச்சினைகள் இருந்தன. இதையெல்லாவற்றையும் கடந்துதான் வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். இது எவ்வளவு பெரிய சாதனை.

அதிமுக ஆட்சிக்காலத்தைவிட இது இரட்டிப்பு மடங்கு வளர்ச்சி. நான்காண்டுகளில் சராசரியாக 8.9 வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம்.

இதனை மிகப்பெரிய சாதனையாக ஏன் குறிப்பிடுகிறோமெனில், அதிமுக ஆட்சிக்காலத்தில், கடந்த 2011-16இல் பொருளாதார வளர்ச்சி 6.7%, அதன்பின், 2016-21இல் 5.2% ஆக மேலும் குறைந்துவிட்டது. இதை நான் தரவுகளுடன் தெரிவிக்கிறேன்.

கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தமிழ்நாட்டைப் போலவே பெரிய மாநிலங்களான கர்நாடகம் 7.9%, மகாராஷ்டிரம் 8.2% வளர்ச்சி அடைந்திருந்தபோது, நாம்(தமிழகம்) 11.19% வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.

இது எதைக் காட்டுகிறதெனில், நம் அரசு எந்தளவுக்கு நிர்வாகத் திறனுடன் ஆட்சி நடத்துகிறோம் என்பதைக் காட்டுகிறது.

ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் 3-ஆவது இடத்திலிருந்து முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். ஆட்சிக்கு வருவதற்கு முன், 26 பில்லியன் டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதியை 52 பில்லியன் டாலராக உயர்த்தியிருக்கிறோம். இதிலும் அதிமுக ஆட்சியைவிட இரட்டிப்பு வளர்ச்சியே.

வேலைவாய்ப்பில், உற்பத்தி துறையில் மட்டும் 35 லட்சத்திலிருந்து 73 லட்சமாக உயர்த்தியிருக்கிறோம். இதிலும் இரட்டிப்பு வளர்ச்சி.

அவர்கள் 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை நாம் நான்கே ஆண்டுகளில் செய்து காட்டியிருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, எங்களுடைய சாதனையை நாங்களே முறியடிப்போம் என்பதையும் உறுதியாகச் சொல்கிறேன்!” என்றார்.

Summary

Tamil Nadu 11.19% economic growth: Chief Minister Stalin proud by releasing a video!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.