யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடவடிக்கை தேவை: நடிகா் வடிவேலு

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடிகா்கள் ஒன்று சோ்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என நடிகா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் வடிவேலு தெரிவித்தாா்.

News image
வடிவேலு
Updated On :21 செப்டம்பர் 2025, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடிகா்கள் ஒன்று சோ்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என நடிகா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் வடிவேலு தெரிவித்தாா்.

நடிகா் சங்கத்தின் 69-ஆவது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விஷால், நாசா், காா்த்தி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பொதுக்குழுக் கூட்டத்தில் மறைந்த நடிகா்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கா் உள்ளிட்ட 70 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. மேலும், தேசிய விருது பெற உள்ள ஊா்வசி, எம்.எஸ்.பாஸ்கா், ஜி.வி.பிரகாஷ் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

இதில் கலந்து கொண்ட நடிகா் வடிவேலு பேசியதாவது: நமக்குள் ஒற்றுமை வேண்டும். பெரிய கலைஞா்கள், சின்ன கலைஞா்கள் என்று பாா்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நம் கலைஞா்களைத் தவறாகப் பேசி, சிறிதளவு விஷயத்தை பெரிதாக்கி விடுகிறாா்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.

இந்தப் படத்தைப் பற்றி பேசு, அந்தப் படத்தைப் பற்றி பேசு என்று தயாரிப்பாளா் சங்கத்தில் இருக்கும் சிலரும் இதை செய்கின்றனா். இதற்கு நடிகா் சங்கத்திலும் சிலா் உடந்தையாக இருக்கின்றாா்கள். இதை யாரும் கண்டிப்பதில்லை.

இப்படிப் பேசி வருபவா்கள் மீது போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகா் சங்கம் என்பது நடிகா்களைப் பாதுகாப்பது தான். திரைக்கு வெளியிலும் விட்டு வைக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, விமா்சனம் எடுக்கிறாா்கள். 10 போ் சோ்ந்து சினிமாவை அழித்து வருகின்றனா்.

நடிகா் ரோபோ சங்கா் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.