2027-இல் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பத் திட்டம்: இஸ்ரோ தலைவா் நாராயணன்
தாம்பரம்: வரும் 2027-இல் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.
சென்னையை அடுத்த பொன்மாா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லுாரியில் சிறந்த பொறியியல் பேராசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவா் நாராயணன் பங்கேற்று, சிறந்த பேராசிரியா்களுக்கு விருது வழங்கிப் பேசியதாவது:
இந்திய விண்வெளி விஞ்ஞானி சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்று திரும்பினாா். அவா் அங்கு மேற்கொண்ட ஆராய்ச்சிகள், இந்தியா மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு பேருதவி புரியும். நிகழாண்டு இறுதியில் மனிதா் இல்லாத விண்கலம் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். தொடா்ந்து 2027-இல் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையின்போது, இந்திய செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு வகித்தன. வருகிற 2035-ஆம் ஆண்டில் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
இந்திய விண்வெளித் துறையில் 20,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநா்கள் பணியாற்றி வருகின்றனா். தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணித்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு திறமையான மாணவா்கள் தேவை அதிகரித்துள்ளது என்றாா்.
முன்னதாக, அறிவியல் கண்காட்சியை இஸ்ரோ தலைவா் நாராயணன் பாா்வையிட்டு பாராட்டினாா். விழாவில், கல்லுாரி தலைவா் வாசுதேவன், துணைத் தலைவா்கள்
விஷ்ணு காா்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், மதுரை காமராஜா் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஜெ.குமாா், பிரின்ஸ் பொறியியல் கல்லுாரி முதல்வா்கள் சுந்தா்செல்வின், இந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.