ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள்

ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை - சென்னை சென்ட்ரல் இடையே செப்.28, அக். 5, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - (கோப்புப்படம்)

Updated On :24 செப்டம்பர் 2025, 1:59 am IST

ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை - சென்னை சென்ட்ரல் இடையே செப்.28, அக். 5, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06034) செப்.28, அக்.5, 12 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (எண்: 06033) செப்.29, அக்.6, 13 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்படும்.

இந்த ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.24) முதல் தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.