குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள்

ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை - சென்னை சென்ட்ரல் இடையே செப்.28, அக். 5, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
ரயில்- (கோப்புப்படம்)
Updated On :23 செப்டம்பர் 2025, 8:29 pm

தினமணி செய்திச் சேவை

ஆயுத பூஜையை முன்னிட்டு, கோவை - சென்னை சென்ட்ரல் இடையே செப்.28, அக். 5, 12 ஆகிய நாள்களில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கோவை - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06034) செப்.28, அக்.5, 12 ஆகிய தேதிகளில் கோவையிலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும். மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரல் - கோவை சிறப்பு ரயில் (எண்: 06033) செப்.29, அக்.6, 13 ஆகிய தேதிகளில் சென்னையிலிருந்து காலை 10.15 மணிக்குப் புறப்படும்.

இந்த ரயில்கள் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை (செப்.24) முதல் தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.