மாதவரம் - சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் தொடங்கப்படுவது குறித்து...
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)
மெட்ரோ ரயில் (கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 2 வழித் தடங்களில் செயல்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ. தூரத்துக்கு மேலும் 3 வழித்தடங்களில் (3, 4, 5 வழித்தடங்கள்) ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதில், 5-ஆவது வழித்தடமானது மாதவரம் பால் பண்ணையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூா் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கிமீ தூரத்திற்கு 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள், 39 உயர்நிலை ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே இடையேயான 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், பூவிருந்தவல்லி - போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஆளில்லா முதல் மெட்ரோ ரயில் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஜூன் 2026-ல் போரூர்- கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையேயான ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ மெட்ரோ ரயில் பாதையின் இரண்டாம் கட்டப்பணிகள் இறுதி நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Metro Rail administration officials have informed that the Madhavaram-Sholinganallur metro rail service will be launched in March 2027.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com