தமிழக பேரவைத் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்த பாஜக!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளர்கள் நியமனம் பற்றி...

அமித் ஷாவுடன் ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)
IANS

அமித் ஷாவுடன் ஜெ.பி.நட்டா (கோப்புப்படம்)
IANS
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரம், கூட்டணி விவகாரம், கட்சிக்கு பொறுப்பாளர்கள் நியமனம் என தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர அரசியல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
அதன்படி தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை எம்.பி.யான இவர் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருக்கிறார்.
இணை பொறுப்பாளராக மத்திய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பாஜக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...