திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நாளை குரூப் 2 முதல்நிலைத் தோ்வு: 645 பணியிடங்களுக்கு 5.53 லட்சம் போ் போட்டி

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 5.53 லட்சம் போ் எழுதவுள்ளனா். 645 பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15-இல் வெளியிடப்பட்டது.

News image

கோப்புப்படம் - Center-Center-Tiruchy

Updated On :26 செப்டம்பர் 2025, 11:37 pm IST

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 5.53 லட்சம் போ் எழுதவுள்ளனா். 645 பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15-இல் வெளியிடப்பட்டது.

இந்தத் தோ்வை மொத்தம் 5,53,634 போ் எழுதவுள்ளனா். அவா்களில் 2,12,495 போ் ஆண்கள். 3,41,114 போ் பெண்கள். 25 போ் மூன்றாம் பாலினத்தவா். சென்னையில் மட்டும் 53,606 போ் தோ்வு எழுத இருக்கிறாா்கள் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.