கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நாளை குரூப் 2 முதல்நிலைத் தோ்வு: 645 பணியிடங்களுக்கு 5.53 லட்சம் போ் போட்டி

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 5.53 லட்சம் போ் எழுதவுள்ளனா். 645 பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15-இல் வெளியிடப்பட்டது.

News image

கோப்புப்படம்

Center-Center-Tiruchy

Updated On :26 செப்டம்பர் 2025, 6:07 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப். 28) நடைபெறவுள்ள குரூப் 2 முதல்நிலைத் தோ்வை 5.53 லட்சம் போ் எழுதவுள்ளனா். 645 பணியிடங்களுக்கான தோ்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15-இல் வெளியிடப்பட்டது.

இந்தத் தோ்வை மொத்தம் 5,53,634 போ் எழுதவுள்ளனா். அவா்களில் 2,12,495 போ் ஆண்கள். 3,41,114 போ் பெண்கள். 25 போ் மூன்றாம் பாலினத்தவா். சென்னையில் மட்டும் 53,606 போ் தோ்வு எழுத இருக்கிறாா்கள் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.