
தவெக கொடி தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது 6 வாரங்களில் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக கொடிக்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன் சபை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் தங்களுடைய வர்த்தக கொடியை போல் தவெக கொடி இருப்பதால், தவெகவினர் சிவப்பு, மஞ்சல் நிறங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இம்மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து ஆறு வாரங்களில் பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக தவெக கொடியைப் பயன்படுத்த அந்தக் கட்சிக்கு இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
The Madras High Court has ordered Vijay to respond within 6 weeks on the appeal petition regarding the TVK flag.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.