டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்: இபிஎஸ்

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்த சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :28 செப்டம்பர் 2025, 6:05 am

இணையதளச் செய்திப் பிரிவு

அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினரை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தவெக கூட்டம் நடைபெறுகின்றபோதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏற்கெனவே நடந்த தவெகவின் 4 கூட்டங்களைப் பார்த்து அதற்கேற்றவாறு முழுமையான பாதுகாப்பை அரசும் காவல் துறையும் கொடுத்திருக்க வேண்டும்.

அதேபோல் அதிமுகவின் எழுச்சிப் பயணித்தின்போதுகூட முழுமையான பாதுகாப்பை அரசு கொடுக்க வில்லை. இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடக்கிறது. காவல்துறையும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அறிவித்த நேரத்தில் கூட்டம் நடத்தாமல், பல மணி நேரம் தாமதமாக வந்து கூட்டம் நடத்துகிறார்கள்.

அரசியல் கட்சித் தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலாசித்து, செயல்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால் கட்சி, காவல் துறை, அரசை நம்பிதான் மக்கள் பங்கேற்கிறார்கள். அரசும் காவல்துறையும் முழுப் பாதுகாப்பு அளித்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம். அனுபவமுள்ள கட்சிகளின் கூட்டங்களைப் பார்த்து புதிய கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சியில் இப்படிபட்ட நிகழ்வுகள் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டம் நடத்துவதே மிகவும் சிரமம். நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகே கூட்டம் நடத்த முடிகிறது. இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்திற்கு இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மெரினாவில் ஏர் ஷோவின் போது சரியான பாதுகாப்பு கொடுக்கப்படாததால் 5 பேர் பலியாகினர். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

summary

Former CM Edappadi Palaniswami cites security lapses by police and administration behind Karur TVK rally stampede, urging preventive measures to avoid future tragedies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.