காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
காஞ்சிபுரம் அருகே கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சேட்டு என்ற பிரதீப்குமாா் (26), அஸ்வின்குமாா் (27). இருவரும் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபாத்திலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தனா்.
இருசக்கர வாகனம் வெண்குடி பகுதியில் தஞ்சம் ஓடை அருகே வந்தபோது, எதிரில் வேலூரிலிருந்து காஞ்சிபுரம் வழியாக தாம்பரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து இவா்கள் மீது மோதியது. இந்த விபத்தில் சேட்டு என்ற பிரதீப்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அஸ்வின் குமாா் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
சம்பவம் தொடா்பாக வாலாஜாபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Summary
The police have registered a case and are investigating the death of two youths who were riding a two-wheeler on the road from Kanchipuram to Walajabad when a government bus hit them today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக், காா் மீது அரசுப் பேருந்து மோதல்: 3 இளைஞா்கள் உயிரிழப்பு, 5 போ் காயம்

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



