வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கரூர் பலி: இரவில் உடற்கூராய்வு செய்யக் கூடாதா? உண்மை என்ன?

கரூரில் இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்யப்பட்டது பற்றி விளக்கம்...

News image

கரூர் பிணவறை வெளியே இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். - TNDIPR

Updated On :29 செப்டம்பர் 2025, 2:40 pm IST

கரூரில் இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்தது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்புக் குழு விளக்கம் அளித்துள்ளது.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்தில் மற்றும் வரும் வழியில் பலியானவர்கள் அனைவரின் சடலங்களும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் பிணவறையில் சனிக்கிழமை நள்ளிரவு வைக்கப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, அண்டை மாவட்டங்களில் இருந்து மருத்துவக் குழுக்களும் கரூருக்கு வரவழைக்கப்பட்டது.

தொடர்ந்து, அன்றிரவே அனைத்து சடலங்களையும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்து ஞாயிற்றுக்கிழமை காலையே உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் உடற்கூராய்வு செய்ததாக இணையத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்புக் குழு விளக்கம் அளித்துள்ளது. இரவில் உடற்கூராய்வுக்கு அனுமதி அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 2021 ஆம் ஆண்டு வெளியிட்ட உத்தரவு பகிரப்பட்டுள்ளது.

அதில், தெரிவிக்கபட்டிருப்பதாவது:

“சில மருத்துவ நிறுவனங்கள் இரவுநேர உடற்கூராய்வு செய்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் விரைவான முன்னேற்றம், குறிப்பாக தேவையான விளக்குகள் மற்றும் உடற்கூராய்வு செய்வதற்கான உள்கட்டமைப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, மருத்துவமனைகளில் இரவு நேர உடற்கூராய்வு செய்வது சாத்தியமாகும்.

எனவே, மாலை நேரத்துக்குப் பிறகு உடற்கூராய்வு வழக்கமாக நடத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளில் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், சட்டம் - ஒழுங்கு நிலைமை இல்லாவிட்டால், கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, சிதைந்த உடல்கள், சந்தேகிக்கப்படும் குற்றங்கள் போன்ற பிரிவுகளின் கீழ் உள்ள வழக்குகளை இரவு நேரத்தில் உடற்கூராய்வுக்கு உட்படுத்தக்கூடாது.

இரவுகளில் உடற்கூராய்வு செய்யப்படுவதை முழுமையாக விடியோவாக பதிவு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Story image

Summary

Karur Stampede: Shouldn't an autopsy be performed at night? What's the truth?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.