கரூர் பலி: புதிய விசாரணை அதிகாரி நியமனம்!

கரூர் பலி சம்பவத்தில் புதிய விசாரணை அதிகாரி நியமனம்.
கரூர் நெரிசல்
கரூர் நெரிசல்
Published on
Updated on
1 min read

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, இன்று(செப். 29) காலை முதல் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தவெக தலைவர் விஜய், கரூரில் சனிக்கிழமை இரவு மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனா். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் 2வது நாளாக கரூரில் இன்று(செப். 29) விசாரணை நடத்தி வருகிறது.

கூட்ட நெரிசல் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, பலியானவர்களின் வீடுகளுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: தடம்புரண்ட திரைக்கதை!

Summary

ADSP Premanandan has been appointed as the new investigating officer in the incident in which 41 people died in a stampede at a Karur Thaweka campaign rally.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com