ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தொடர் மழை எதிரொலி! உச்சம் தொடும் ஏரிகளின் நீர்மட்டம்!

தொடர் மழை எதிரொலியாக கடந்த 4 ஆண்டுகளில் ஏரிகளின் நீர்மட்டம் இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது.

News image
செம்பரம்பாக்கம் - கோப்பிலிருந்து - ENS
Updated On :29 செப்டம்பர் 2025, 5:58 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமாகும்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி, நகரின் நீர்த்தேக்கங்களில் ஒட்டுமொத்த நீர் இருப்பு 68.87 சதவிகிதமாக இருந்தது, இது கடந்த நான்கு ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் பதிவான அதிகபட்ச அளவாகும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்ததன் எதிரொலியாக இந்த ஆண்டு நகரின் குடிநீர் இருப்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.

இதனால், 2026 கோடைக் காலம் வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வளத் துறையின் தரவுகளின்படி, பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகபட்ச உயர்வைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த நேரத்தில் நீர்வரத்து 330 கன அடி மட்டுமே இருந்தது மற்றும் நீர் இருப்பு 4.39 சதவிகிதமாக இருந்தது.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி பூண்டி ஏரியின் நீர்வரத்து 680 கன அடியைத் தொட்டது நீர் இருப்பு 77.93 சதவிகிதமாக இருக்கிறது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு நீர்வரத்து 106 சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழகம் 2,412 மில்லியன் கனஅடி தண்ணீரை மட்டுமே பெற்றுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரி எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு கோடைக் காலத்தின் சென்னை நகரின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தற்போதைய நீர்த்தேக்க அளவுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு நீர் இருப்பு 1.117 டிஎம்சி அடி (30.64%) ஆக இருந்தது. திங்கள்கிழமை, இது 1,788 மில்லியன் கன அடி (48.15%) ஆக இருந்தது. வடமேற்கு பருவமழையின் போது நகரத்தில் அவ்வப்போது பலத்த மழை பெய்ததால் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

புழல் ஏரிக்கு நீர்வரத்து 26 கன அடியாக உள்ளது. அதன் மொத்த நீர் கொள்ளவு 50 கன அடியாக இருக்கும் நிலையில், 2928 மில்லியன் கன அடி நீர் நிரம்பியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.