அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: 1,010 இ-மெயில் முகவரிகள் கண்காணிப்பு! - சைபர் கிரைம்

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது பற்றி சைபர் கிரைம் போலீசார் கருத்து

News image
கோவை இணையவழி குற்றப்பிரிவு- DIN
Updated On :30 செப்டம்பர் 2025, 9:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வரும் நிலையில் 1,010 இ-மெயில் ஐ.டி.களை காவல்துறையினர் கண்டுபிடித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சமீப காலமாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் கோவை விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 100 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு முன் கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு அடுத்தடுத்த நாள்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 26 ஆம் தேதி மற்றும் அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு 27 ஆம் தேதி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதேநாள் பிற்பகல் கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நேற்று கோவை விமான நிலையம் உள்பட நாட்டின் பல்வேறு பள்ளிகள், விமான நிலையங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மிரட்டல் வரும் ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் காவல் துறையினர் விரைந்து சென்று அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்துகின்றனர்.

இதுவரை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 1,000 இ-மெயில் ஐ.டி.களை கண்டுபிடித்து உள்ள சைபர் கிரைம் போலீசார், பின்னணியில் உள்ள நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி காவல் துறையினர் கூறும்போது போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் நடப்பாண்டில் 24 முறை வந்து உள்ளதாகவும் கடந்தாண்டு இது 23 ஆக இருந்தது எனவும் இத்தகைய மிரட்டல்கும்பல் டார்க் - வெப் வாயிலாக இ-மெயில்களை அனுப்புகின்றனர்,அதில் அவர்களின் அடையாளங்கள் தெரியாது, இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கிறோம், இதுவரை 1,010 இ-மெயில் ஐ.டி.களில் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

summary

1,010 email addresses are monitoring for kovai bomb threat bomb: Cyber crime

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.