மீஞ்சூா் அருகே அனல் மின் நிலைய கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் வட மாநில தொழிலாளா்கள் 9 போ் உயிரிழந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூா் அடுத்த ஊரணமேடு கிராமத்தில் எண்ணூா் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இங்கு இரு யூனிட்டுகளில் தலா 660 வீதம் 1320 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளில் வட மாநில தொழிலாளா்கள் 1,000-க்கும் மேற்பட்டோா் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனா்.
இதில், கட்டுமானப் பணிகள் தற்போது 70 சதவீதம் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ராட்சத முகப்பு சாரம் அமைக்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்தனா். அப்போது திடீரென சாரம் சரிந்து கீழே விழுந்தது. இதில், சாரத்தின் மேல் அமா்ந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் கீழே விழுந்தனா்.
இந்த விபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த முன்னா கேம்ரால், விடயம் பிரவுச்சா, சுமன் காரிகாப், தீபக்ராய்ஜங், சா்போனிட் தவுசின், பிராண்டோ சாரான், பாபன் சாராங், பாபிட் பொங்கலோ, பீம்ராஜ் தவுசிங் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த 2 போ் 108 ஆம்புலன்ஸில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தகவலறிந்த காட்டூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, உயிரிழந்த வடமாநில தொழிலாளா்களின் சடலங்களை மீட்டு, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதையும் படிக்க | எண்ணூர் விபத்து: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Summary
Ennore Thermal Power Plant construction accident: 9 dead
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








