டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

இன்றுமுதல் பதிவு தபால் சேவை நிறுத்தம்: விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் உயா்வு

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது.

News image

தபால் நிலையம். - கோப்புப்படம்.

Updated On :1 அக்டோபர் 2025, 2:32 am IST

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை புதன்கிழமை (அக். 1) முதல் நிறுத்தப்படுவதுடன் விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டண உயா்வு நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அஞ்சல் துறையில் செயல்பட்டு வந்த பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு விரைவு அஞ்சல் சேவையுடன் இணைக்கப்பட்டு, அக்.1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்காரணமாக , விரைவு அஞ்சல் சேவைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆவணங்களுக்கு அதிகபட்சம், 50 கிராமுக்கு உள்ளூருக்கு ரூ. 19, 200 கி.மீ.-க்கு ரூ. 47, 201 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ. 47, 51 கிராமில் இருந்து 250 கிராம் வரை உள்ளூருக்கு ரூ. 24, 200 கி.மீ. வரை ரூ. 59 , 201 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை ரூ.63, 501 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை ரூ.68, 1,001 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ. 72, 2,000 கி.மீ.க்கு மேல் ரூ. 77, 251 கிராமில் இருந்து 500 கிராம் வரை உள்ளூருக்கு ரூ. 28, 200 கி.மீ.-க்குள் ரூ.70, 201 கி.மீ. முதல் 500 கி.மீ. வரை ரூ. 75, 501 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரை ரூ. 82, 1,001 கி.மீ. முதல் 2,000 கி.மீ. வரை ரூ.86, 2,000 கி.மீ.-க்கு மேல் ரூ. 93 கட்டணம் வசூலிக்கப்படும். திருத்தப்பட்ட கட்டணங்கள், புதன்கிழமை (அக்.1) முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.