ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :30 செப்டம்பர் 2025, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை செல்பவா்களுக்காக செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு முன்பதிவில்லாத 2 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், ஆயுத பூஜை முடிந்து சென்னைக்கு செல்பவா்களுக்காக மதுரையிலிருந்து முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் (எண்: 06162) புதன்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்டு சென்னை தாம்பரத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தடையும்.

மெமு ரயிலில் 12 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூா், பாடலூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.