கோப்புப்படம்.
கோப்புப்படம்.

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Published on

ஆயுத பூஜையை முன்னிட்டு, மதுரையிலிருந்து சென்னை தாம்பரத்துக்கு புதன்கிழமை (செப்.1) மாலை 4 மணிக்கு முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை தாம்பரத்தில் இருந்து மதுரை செல்பவா்களுக்காக செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு முன்பதிவில்லாத 2 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில், ஆயுத பூஜை முடிந்து சென்னைக்கு செல்பவா்களுக்காக மதுரையிலிருந்து முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் (எண்: 06162) புதன்கிழமை மாலை 4 மணிக்குப் புறப்பட்டு சென்னை தாம்பரத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்தடையும்.

மெமு ரயிலில் 12 பெட்டிகள் இடம் பெற்றிருக்கும்.

இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூா், பாடலூா், தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், கடலூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com