கன்னியாகுமரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் இன்று(ஏப். 8) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் தவெக, சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம் திடல், வடலூர் நான்குமுனை சந்திப்பு, சேத்தியாத்தோப்பு நான்குமுனை சந்திப்பு, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் நாளை 9 ஆம் தேதி த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏப். 12 ஆம் தேதி பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி திடலில் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கு காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், விஜய்யின் வாகனத்தை பின் தொடரக்கூடாது, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தவெக சார்பில் செய்து தர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
தவெக தலைவர் விஜய்யின் கன்னியாகுமரி பிரசாரத்துக்கு 5,000 பேர் வரை அனுமதிக்க வேண்டும் என தவெக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் காவல் துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Summary
The Police Department has granted permission for TVK leader Vijay's campaign in Kanyakumari.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!

விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




