வடபழநியில் களைகட்டும் தைப்பூசம்: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழநி ஆண்டவர் முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வடபழநி முருகப்பெருமான் சிறப்பு தரிசனம் / வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
வடபழநி முருகப்பெருமான் சிறப்பு தரிசனம் / வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்படம் - எக்ஸ்
Updated on
1 min read

தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழநி ஆண்டவர் முருகன் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தைப்பூசத்தையொட்டி வடபழநி ஆண்டவருக்கு அதிகாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பால் காவடி, மயில் காவடி எடுத்து பக்தர்கள் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் வாயில் தொடங்கி நுழைவு வாயிலுக்கு வெளியே வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து வருகின்றனர்.

கைக்குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கு தனி வழியே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

பக்தர்கள் வசதிக்காக கோயில் அருகே மருத்துவ முகாம்கள், பக்தர்கள் சிரமமின்றி கோயில் உள்ளே நுழைய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வழிநடத்தப்பட்டு வருகின்றனர்.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பக்தர்கள் வருகையால் வடபழநியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடபழநி முருகப்பெருமான் சிறப்பு தரிசனம் / வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
தைப்பூசம்: அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள்! பக்தர்கள் தரிசனம்
Summary

Thaipoosam 2026 Devotees dharshan in Vadapalani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com