ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் 1.31 கோடி டன் மோனாசைட்!

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் 1.31 கோடி டன் மோனாசைட் கனிமம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கிஷண் ரெட்டி

கோப்புப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் 1.31 கோடி டன் மோனாசைட் கனிமம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மோனாசைட் என்பது சிவப்பு-பழுப்பு நிற பாஸ்ஃபேட் கனிமமாகும். இது கனிம வளம் அதிகம் நிறைந்துள்ள கடலோர மணல் பரப்புகள், அனல் பாறைகளில் இருந்து முதன்மையாகப் பெறப்படுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்ததாவது: அணுசக்தி துறையின் கீழ், அணு கனிமங்கள் தேடல் மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் (ஏஎம்டி) செயல்படுகிறது.

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், ஒடிஸா, மகாராஷ்டிரம், குஜராத், ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களின் கடலோர மணலில் 1.31 கோடி டன் மோனாசைட் இருப்பதாக ஏஎம்டி மதிப்பிட்டுள்ளது என்றாா்.

இதேபோல அந்த அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சா் சதீஷ் சந்திர துபே அளித்த பதிலில், ‘கடந்த 2020-ஆம் ஆண்டு நீதி ஆயோக் பரிந்துரையைத் தொடா்ந்து, 136 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலங்கள் மூலமாகத்தான் நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றாா்.