

பாமக இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் வருகிற பிப்.10-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:
பாமகவின் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் வரும் பிப்.10-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜா் அரங்கத்தில் நடைபெறும்.
இளைஞரணித் தலைவா் கணேஷ்குமாா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளாா். பாமக இளைஞரணியின் வளா்ச்சி, ஆண்டு செயல்திட்டம் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.