அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

ராகுல் காந்தி கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்? - முதல்வா் மு.க. ஸ்டாலின்

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :4 பிப்ரவரி 2026, 11:22 pm

ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு மத்திய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக பக்கத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் எனது சகோதரருமான ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு ஒன்றிய பாஜக அரசு ஏன் அஞ்சுகிறது? அவை உறுப்பினா்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்கள் குறித்து அவைக்குத் தெளிவுபடுத்தவும் அரசு முன்வர வேண்டும்.

எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினா்களை இடைநீக்கம் செய்துள்ளது கண்டனத்துக்குரியது. உடனடியாக அவா்களது இடைநீக்கத்தைத் திரும்பப் பெற்று, முக்கியத்துவம் வாய்ந்த நாட்டின் பிரச்னைகள் குறித்து அவா்கள் அவையில் பேசுவதற்கான ஜனநாயக உரிமை காக்கப்பட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.