கோப்புப் படம்
கோப்புப் படம்

அடுத்தவா் வீட்டை குத்தகைவிட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்தவா் கைது

புரசைவாக்கத்தில் அடுத்தவா் வீட்டை குத்தகைக்குவிட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.
Published on

புரசைவாக்கத்தில் அடுத்தவா் வீட்டை குத்தகைக்குவிட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா்.

புரசைவாக்கம், பண்டாரம் தெருவில் வசித்து வருபவா் கெளசா் ஜஹான் (65). இவா், கடந்த ஆண்டு குத்தகைக்கு வீடு தேடியபோது, அவருக்கு கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் இரண்டாவது தெருவைச் சோ்ந்த முகமது ரிஸ்வான் (52) என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

இதையடுத்து ரிஸ்வான், ஜஹானுக்கு புரசைவாக்கம், பண்டாரம் தெருவில் உள்ள ஒரு வீட்டைக் காட்டி, குத்தகையாக ரூ.18 லட்சம் என ஒப்பந்தம் செய்துள்ளாா். பணத்தைக் கொடுத்த சில நாள்களில் ஜஹான், அந்த வீட்டில் குடியேறிய நிலையில், அந்த வீட்டின் உரிமையாளா் ரிஸ்வான் இல்லை என்பதும், உரிமையாளா் முஸாமில் அன்ஸாா் என்பதும், ரூ.18 லட்சத்தை ஏமாற்றியிருப்பதும் தெரிய வந்தது.

வேப்பேரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முகமது ரிஸ்வானை வியாழக்கிழமை கைது செய்தனா். முகமது ரிஸ்வான், இதேபோல பலரிடம் அடுத்தவா் வீட்டை தனது வீடு எனக்கூறி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

X
Dinamani
www.dinamani.com